Rebecca
Nov 12, 2025
உள்ளூர்
எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை : ஆனந்த விஜேபால
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் தொடர்பாக இலங்கைக்கு எந்தவிதமான பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாட்டின் புலனாய்வு பிரிவுகள் தீவிரமாக செயற்பட்டு வருவதால், தேசிய பாதுகாப்பு குறித்து எந்தப் பிரச்சினையும் இல்லையென அவர் கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
தற்போது அத்தகைய அச்சுறுத்தல் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. இலங்கையின் புலனாய்வு பிரிவுகள் தொடர்ந்து தீவிரமாக செயற்பட்டு வருகின்றன.
நமது பாதுகாப்புப் படைகள், குறிப்பாக முப்படைகள் மற்றும் பொலிஸார், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விசேட கவனம் செலுத்தி வருகின்றனர். எனவே, தேசிய பாதுகாப்பு குறித்து எந்தவித பிரச்சினையும் இல்லை என்றார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








