Search

Sep 27, 2025

உள்ளூர்

ராஜித சேனாரத்ன மீது குற்றப்பத்திரிகை.

கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகற்றும் ஒப்பந்தம் தொடர்பாக ரூ.2.6 மில்லியனுக்கு அதிக இழப்பு ஏற்பட்டதாகக் கூறி, முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே ஆகியோருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

ராஜித சேனாரத்ன, உபாலி லியனகே ஆகியோர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு 2026 ஜனவரி 30ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All