Aug 27, 2025
உள்ளூர்
பிமல் ரத்நாயக்கவின் கருத்துக்கள் தவறு - அர்ச்சுனா கருத்து!
நீதிமன்றம் மக்களுக்கு பயந்து தீர்ப்புக்களை வழங்கி இருக்கின்றதா என்ற சந்தேகம் ஒன்று வருகிறது என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.
- இது தொடர்பில் ஊடகங்களில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நேற்று (26) இடம்பெற்ற சம்பவம் மக்களை காட்டி நீதிமன்றத்தை மிரட்ட முடியாது என்று கூறிய கருத்துக்கள் நான் எப்படி பார்க்கின்றேன் என்றால் நீதிமன்றம் மக்களுக்கு பயந்து தீர்ப்புக்களை வழங்கி இருக்கின்றதா என்ற சந்தேகம் ஒன்று வருகிறது.
இவ்வாறு நீதிமன்றங்களை அவமதிக்கும் செயற்பாடுகளை நான் நல்ல செயற்பாடாக பார்க்கவில்லை.
நான் நீதிமன்ற தீர்ப்புக்களை தவறு என்று கூறவில்லை நீதிமன்றங்கள் தொடர்பாக பிமல் ரத்நாயக்க தெரிவித்த கருத்துக்களை பிழை என்று கூறுகின்றேன். என்று தெரிவித்தார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








