Search

Rebecca

Sep 5, 2025

உள்ளூர்

மட்டக்களப்பு நொச்சிமுனை பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி விஜயம்

மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட நொச்சிமுனை கிராமத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் அவர் வடிகான் அமைப்பு குறைபாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பில் அப்பகுதி மக்களின் வேண்டுகோளுக்கிணங்க பார்வையிட்டதோடு, அப்பகுதி மக்களின் குறைபாடுகளையும் கேட்டறிந்து கொண்டார்.

எதிர்வரும் காலங்களில் அரசாங்கத்தினால், இப்பகுதியில் வடிகான்கள் மற்றும் அழகுப்படுத்தும் பணிகளும் நன்னீர் மீன் மீன்பிடியாளர்களுக்கு வேண்டிய வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இதன்போது தேசிய மக்கள் சக்தியின் மாநகர சபை உறுப்பினர்கள், பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.



Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All