Rebecca
Nov 19, 2025
உள்ளூர்
விடுதி உரிமையாளரை கொல்ல முயன்றவர் கைது!
வெலிகம பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றின் உரிமையாளரைக் கொலை செய்யும் நோக்கத்துடன் பிரவேசித்த சந்தேகநபர் ஒருரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவுப் பணிப்பாளரின் தலைமையிலான குழுவினால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின்போது இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடம் டி-56 ரக துப்பாக்கியொன்று கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளொன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பில் மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All








