Search

Jino

Sep 30, 2025

உள்ளூர்

பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் பணிப்புறக்கணிப்பு.

நாடு முழுவதும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் இன்று (செப்டம்பர் 30) ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளது.

பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளுக்கு அரசாங்கம் இதுவரை தீர்வு காணவில்லை என்று குற்றம்சாட்டிய சங்கத்தின் செயலாளர், சிரேஸ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க, இதுகுறித்த அறிவிப்பை நேற்று வெளியிட்டார்.

அரச பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பற்றாக்குறை தீவிரமடைந்துள்ளதாகவும், கடந்த வருடத்தில் பேராதனை பல்கலைக்கழகத்திலிருந்து 200 பேராசிரியர்கள் விலகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச கல்வி தற்போது கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp