
admin
Jul 4, 2026
உள்ளூர்
பேராதெனிய நோக்கி மாற்றப்பட்ட தொடருந்து பெட்டிகள் – அடுத்த கட்ட பணிகள் ஆரம்பம்!

டித்வா புயலால் கடுமையாகச் சேதமடைந்த கடுங்கன்னாவா – ரம்புக்கனை இடையிலான கண்டி–கொழும்பு பிரதான தொடருந்து பாதையைச் சீரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தொடருந்து பாதை சேதமடைந்து போக்குவரத்து தடைப்பட்டதால், தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் அடங்கிய இரண்டு தொடருந்து பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து அகற்றப்பட்டு, கண்டியிலிருந்து பேராதெனிய தொடருந்து நிலையத்திற்குச் சாலை மார்க்கமாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இந்த தொடருந்து பெட்டிகளை நகர்த்துவதற்காக இலங்கையிலேயே தயாரிக்கப்பட்ட கனரக போக்குவரத்து பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இரு பெட்டிகளும் பேராதெனியவிற்கு வெற்றிகரமாகக் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அதே கனரக வாகனத்தைப் பயன்படுத்தி தொடர்வண்டியையும் பேராதெனிய தொடருந்து நிலையத்திற்குக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






