Search

janani

Apr 1, 2026

உள்ளூர்

தீப்பிடித்து எரிந்த ரயில் பெட்டிகள்!

காலி ரயில் நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட இரண்டு ரயில் பெட்டிகள் நேற்று இரவு திடீரென தீப்பிடித்து எரிந்துதுள்ளது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும், காலி மாநகர சபையின் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட பெட்டிகள் என்பதால் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட வாய்ப்பில்லை எனக் கருதும் அதிகாரிகள், சமூக விரோதச் செயல்கள் ஏதேனும் நடந்திருக்குமா என்பது குறித்தும் ஆராய்ந்து வருகின்றனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All