Search

admin

Jan 23, 2026

உள்ளூர்

சட்டவிரோத தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் கைது

ரிதீமாலியத்த, பெதன்கஹஆராவ பகுதியில் தொல்பொருட்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட 07 சந்தேக நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரிதீமாலியத்த பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 41 முதல் 66 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், அவர்கள் ஹங்குரன்கெத்த, ரிதீமாலியத்த, கந்தளாய் மற்றும் ரக்வான ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் ரிதீமாலியத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All