
admin
May 20, 2026
உள்ளூர்
நிலக்கரி விநியோகஸ்தருக்கு விழுந்தது பலத்த அபராதம்!

தேவையான மின் உற்பத்தியை வழங்கத் தவறிய நிலக்கரி விநியோகம் தொடர்பாக, சுமார் 27 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு நேற்று (19) தெரிவித்துள்ளது.
அத்துடன், மேலும் 15 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பிணைப்பத்திரத் தொகையும் அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த வலுசக்தி பிரதி அமைச்சர் அர்க்காம் இலியாஸ்,
"சர்ச்சைக்குரிய இந்த நிலக்கரித் தொகுதி நாம் எதிர்பார்க்கும் அளவிலான மின் உற்பத்தியை வழங்குவதில்லை. இருப்பினும், நாம் அந்த நிலக்கரி இருப்புகளைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றோமே தவிர, அவற்றை அகற்றவில்லை."
இந்த விவகாரம் தொடர்பில் அபராதத் தொகைகள் ஏற்கனவே வசூலிக்கப்பட்டுவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், "இதுவரை சுமார் 27 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 15 மில்லியன் அமெரிக்க டொலர் பிணைப்பத்திரமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளது" என்றும் தெரிவித்தார்.
தரம் குறைந்த இந்த நிலக்கரியைப் பயன்படுத்துவதால் மின் உற்பத்தி நிலையத்தின் இயந்திரங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பிரதி அமைச்சர்,
"இங்குள்ள ஒரே பிரச்சினை, இந்த நிலக்கரியிலிருந்து எதிர்பார்க்கப்படும் மின் உற்பத்தி கிடைக்காமல் போவதே ஆகும். இது குறித்து நாம் நிபுணர்களுடன் கலந்தாலோசித்தோம். இதனால் இயந்திரங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று அவர்கள் எங்களுக்கு உறுதியளித்துள்ளனர்."
இதேவேளை, அவசர கொள்முதல் செயல்முறையின் கீழ் கொள்முதல் செய்யப்பட்ட நிலக்கரி குறித்து கருத்துத் தெரிவித்த வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க, அவசர கொள்முதல் நடைமுறைகளின் கீழ் வாங்கப்பட்ட இரண்டு நிலக்கரி கப்பல்கள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவற்றில் எந்தப் பிரச்சினையும் பதிவாகவில்லை என்றும் தெரிவித்தார்.
மின் உற்பத்தியின் போது தேவையான முழுத் திறனும் அதிலிருந்து துல்லியமாகக் கிடைப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






