Search

Rebecca

Feb 9, 2026

உள்ளூர்

இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய 'மாத்ரா" குழு நாடு திரும்பினர்

பேங்கொக்கில் நடைபெற்ற 2ஆவது சர்வதேச நாட்டுப்புறக் கலை விழாவில் (02nd International Folklore Festival) இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய "மாத்ரா" (Matra) நடனக் குழுவினர் தங்கப் பதக்கம் வென்று முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.

5 நாடுகளைச் சேர்ந்த 10 பாரம்பரிய நடனக் குழுக்கள் பங்கேற்ற இந்த விழாவில், "மாத்ரா" குழு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது.

விழாவின் சிறந்த நடனக் கலைஞர் (பெண்): மல்கி இமாஷா (தங்கப் பதக்கம்) வென்றதோடு, விழாவின் சிறந்த நடனக் கலைஞர் (ஆண்): மதுக கவிஷான் (தங்கப் பதக்கம்) வென்றார்.

உடரட்ட (கண்டி), பகதரட்ட (தென்னிலங்கை) மற்றும் சபரகமுவ ஆகிய மூன்று பாரம்பரிய நடன முறைகளையும் ஒருங்கிணைத்து ஒரு தனித்துவமான கலைப்படைப்பை அவர்கள் மேடையேற்றினர்.

வெற்றிக் கிண்ணத்துடன் இந்த கலைக்குழுவினர் நேற்று இரவு 9.50 மணியளவில் இண்டிகோ ஏர்லைன்ஸ் (6E-1173) விமானம் மூலம் சென்னை வழியாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவர்களை வரவேற்பதற்காக சர்வதேச நாட்டுப்புற அமைப்பின் (International Folklore Organization) இலங்கைத் தலைவர் தரிந்து தனஞ்சய மற்றும் குழுவினருடன் நடனக் கலைஞர்களின் பெற்றோர்களும் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All