
puja
Aug 11, 2026
உள்ளூர்
நீதிபதிகளின் ஓய்வு வயது விவகாரம் – சட்டத்தரணிகளை சந்திக்கிறார் ஜனாதிபதி!

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான முன்மொழிவு குறித்து விவாதிப்பதற்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு நாளை பிற்பகல் 1 மணிக்கு சந்திப்பொன்றை வழங்கியுள்ளார்.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பான முன்மொழிவு குறித்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாட்டை, அண்மையில் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தனர்.
22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சரின் பணிப்புரைக்கு அமைவாக தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
அச்சட்டமூலத்தின்படி, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லை 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது எல்லை 65 ஆகவும் திருத்தப்பட்டுள்ளது.
இருப்பினும், ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் குறித்த அரசியலமைப்புத் திருத்தத்தை தற்போதைய சந்தர்ப்பத்தில் செய்ய வேண்டாம் என்பதே சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாடாகும்.
முன்னெடுக்கப்பட்ட இத்தீர்மானம் தொடர்பாக, சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய உள்ளிட்ட குழுவினர் அண்மையில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுடனும் விசேட கலந்துரையாடலொன்றை நடத்தியிருந்தனர்.
அக்கலந்துரையாடலைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக, ஜனாதிபதிய தெளிவுபடுத்துவதற்கான சந்தர்ப்பமொன்றை ஏற்படுத்தித் தருமாறு நீதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்ததாகத் தெரிவித்தார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





