
Rebecca
Jan 13, 2026
உள்ளூர்
அலரிமாளிகையில் இடம்பெற்ற பிரஜா சக்தியின் ஆரம்ப நிகழ்வு

சமூக அபிவிருத்தி சபை பிரதிநிதிகளை தெளிவூட்டும் தேசிய அளவிலான திட்டத்தின் ஆரம்ப விழா இன்று காலை அலரி மாளிகையில் நடைபெற்றது.
வறுமை ஒழிப்பிற்கான தேசிய இயக்கமான “பிரஜா சக்தி” திட்டத்தின் கீழ், நாட்டின் 14,008 கிராம சேவகர் பிரிவுகளில் நிறுவப்பட்டுள்ள சமூக அபிவிருத்தி சபை பிரதிநிதிகளை தெளிவூட்டும் திட்டம், கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக அதிகாரமளிப்பு அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
அதன் ஆரம்ப நிகழ்வாக, மேல் மாகாண சமூக அபிவிருத்தி சபைகளின் செயலாளர்கள் மற்றும் தலைவர்களை தெளிவூட்டும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வு, கிராம அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக அதிகாரமளிப்பு அமைச்சர் பேராசிரியர் உபாலி பன்னில தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தன சூரியாரச்சி, தேவானந்த சுரவீர மற்றும் நிஹால் அபேசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.



Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






