Search

Rebecca

Feb 3, 2026

உள்ளூர்

அரசியலமைப்புச் சபை இன்று கூடுகிறது

அரசியலமைப்புச் சபை இன்று (03) கூடவுள்ளது.

அரசியலமைப்புச் சபையின் தலைவரான சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இன்று நண்பகல் 12.00 மணிக்கு பாராளுமன்ற வளாகத்தில் இந்தக்கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கணக்காய்வாளர் நாயகம் பதவிக்காக ஜனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் குறித்து இன்றைய தினம் அரசியலமைப்புச் சபை கவனம் செலுத்தவுள்ளது.

அதன்படிஇ புதிய கணக்காய்வாளர் நாயகத்தைத் தெரிவு செய்யும் பணிகள் இன்றைய தினத்திற்குள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி. விக்கிரமரத்ன ஓய்வு பெற்றதையடுத்துஇ கடந்த ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி முதல் கணக்காய்வாளர் நாயகம் பதவி வெற்றிடமாக உள்ளது.

அந்தப் பதவிக்கான பதில் கடமைகளை மேற்கொள்வதற்காகக் கணக்காய்வாளர் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியான தர்மபால கம்மன்பில நியமிக்கப்பட்டிருந்ததுடன்இ அவரது பதில் கடமைக் காலமும் கடந்த டிசம்பர் மாதம் 5 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது.

தற்போது கணக்காய்வாளர் நாயகம் பதவி வெற்றிடமாக உள்ளதுடன்இ ஜனாதிபதியினால் பல சந்தர்ப்பங்களில் அரசியலமைப்புச் சபைக்குப் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட போதிலும்இ அந்தப் பெயர்கள் அரசியலமைப்புச் சபையினால் நிராகரிக்கப்பட்டன.

எவ்வாறாயினும்இ கணக்காய்வாளர் நாயகம் பதவிக்காக ஜனாதிபதியினால் புதிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில்இ அது தொடர்பில் அரசியலமைப்புச் சபை இறுதித் தீர்மானத்தை எடுக்கவுள்ளது.

இதனிடையேஇ பெப்ரவரி மாதத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று நடைபெறுகிறது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை பாராளுமன்றம் கூடவுள்ளதுடன்இ சுதந்திர தினம் காரணமாக நாளை (04) பாராளுமன்ற அமர்வு நடைபெறாது என பாராளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All