Search

Rebecca

Feb 11, 2026

உள்ளூர்

சமன் ஏக்கநாயக்கவுக்கு எதிரான வழக்கு இன்று நீதிமன்றில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளராகப் பணியாற்றிய சமன் ஏக்கநாயக்கவுக்கு எதிரான வழக்கு இன்று (11) கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

சுமார் 166 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில்இ முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு கடந்த ஜனவரி 28ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கின் இரண்டாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கஇ சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் சரணடைந்ததைத் தொடர்ந்து இன்றைய தினம் (11) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

அதன்படிஇ அவரது விளக்கமறியல் காலம் இன்றுடன் நிறைவடைவதால்இ அவர் மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All