
janani
Mar 29, 2026
உள்ளூர்
மேலதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை

அண்மையில் அதிகரிக்கப்பட்ட பேருந்து கட்டணங்களுக்கு அமைய, திருத்தப்பட்ட புதிய கட்டணப் பட்டியலை பயணிகள் தெளிவாகப் பார்க்கும் வகையில் பேருந்துகளுக்குள் காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனை மீறும் பேருந்துகளின் அனுமதிப்பத்திரங்கள் ரத்து செய்யப்படும் என மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பயணிகள் சேவை அனுமதிப்பத்திர நிபந்தனை 16 (A) இன் படி, கட்டணப் பட்டியலை காட்சிப்படுத்துவது கட்டாயமாகும். இதனைப் பின்பற்றத் தவறும் பேருந்துகளுக்கு எதிராகப் பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது .பேருந்து அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.
அதிகரித்த கட்டணத்தை விட மேலதிகமாகப் பணம் வசூலிக்கும் பேருந்து உரிமையாளர்களுக்கு எதிராகத் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மேலும் வலியுறுத்தியுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





