
janani
Apr 5, 2026
உள்ளூர்
வாழ்க்கையை மீண்டும் புதிதாக ஆரம்பிக்கவும், தளராத உறுதியுடன் முன்னோக்கிச் செல்லவும் !

இயேசு கிறிஸ்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு, இலங்கை வாழ் மற்றும் உலகவாழ் கிறிஸ்தவ மக்களுக்கு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், இருளை வென்று ஒளியையும், அச்சத்தை வென்று நம்பிக்கையையும் அடைய முடியும் என்பதே உயிர்த்தெழுந்த இயேசு பெருமான் உலகிற்கு வழங்கிய செய்தி என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
"எந்தவொரு இருண்ட இரவும் நிரந்தரமானதல்ல. ஒவ்வொரு சவாலுக்குப் பின்னாலும் நம்பிக்கையின் விடியல் பிறக்கும் என்பதை ஈஸ்டர் செய்தி எமக்கு நினைவூட்டுகின்றது. வாழ்க்கையை மீண்டும் புதிதாக ஆரம்பிக்கவும், தளராத உறுதியுடன் முன்னோக்கிச் செல்லவும் இது எம்மை ஊக்குவிக்கின்றது" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் தற்போது நிலவும் போர்ச் சூழலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களைக் குறிப்பிட்ட பிரதமர், வெறுப்பு மற்றும் மோதல்களுக்குப் பதிலாகப் பேச்சுவார்த்தைகளும் புரிந்துணர்வும் மேலோங்கிய, போர் அச்சம் நீங்கிய அமைதியான உலகம் உதயமாக வேண்டும் எனத் தனது செய்தியில் பிரார்த்தித்துள்ளார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






