
sasi
Dec 26, 2025
உள்ளூர்
வாகன விபத்தில் 3 வயது சிறுமி உயிரிழப்பு

நேற்று (25) மாலை வெலிப்பன்ன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளுத்கம – மத்துகம பிரதான வீதியின் 5ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில், 3 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த சிறுமி, தனது தாய் மற்றும் தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் மத்துகம நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது, எதிர்திசையில் இருந்து வந்த கெப் ரக வாகனம் ஒன்றுடன் மோதியதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
விபத்தில் காயமடைந்த சிறுமி, அவரது தந்தை மற்றும் தாய் ஆகியோர் தர்கா நகர அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பெற்று வந்த சிறுமி அங்கு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், காயமடைந்த சிறுமியின் தந்தை மற்றும் தாய் மேலதிக சிகிச்சைக்காக தற்போது நாகொட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த விபத்துடன் தொடர்புடைய கெப் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் வெலிப்பன்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






