
sasi
Dec 25, 2025
உள்ளூர்
நாளை காலியில் தேசிய பாதுகாப்பு தின பிரதான நிகழ்வு

இம்முறை தேசிய பாதுகாப்பு தின பிரதான நினைவுகூரல் நிகழ்வு நாளை (26) காலி நகரில் அமைந்துள்ள பெராலிய சுனாமி நினைவுத் தூபி அருகே நடைபெறவுள்ளது. காலை 8.30 மணி முதல் 11.00 மணி வரை இந்த நிகழ்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, 2004 ஆம் ஆண்டு சுனாமி உள்ளிட்ட பல்வேறு அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், நாளை நாடு முழுவதும் காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவில் நாட்டில் 35,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன், 5,000 க்கும் மேற்பட்டோர் காணாமல் போனனர். அத்துடன் பில்லியன் கணக்கான பெறுமதியுடைய சொத்துக்களும் சேதமடைந்தன.
அதற்கமைய, 2005 ஆம் ஆண்டின் 15/1975/715/001-1 இலக்க அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைவாக, 2005 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி "தேசிய பாதுகாப்பு தினமாக" பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், சுனாமி மற்றும் ஏனைய அனர்த்தங்களில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் வகையில், 2005 முதல் 2014 வரை தேசிய பாதுகாப்பு தின நினைவுகூரல் நிகழ்வுகள் அரசியல் தலைமைகளின் பங்கேற்புடனும் மக்களின் பங்களிப்புடனும் தேசிய அளவில் நடத்தப்பட்டுள்ளன.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






