Search

sasi

Dec 27, 2025

உள்ளூர்

‘டிட்வா’ புயலால் சேதமடைந்த ஒவ்வொரு வீட்டிற்கும் 5 இலட்சம் ரூபாய் நிதியுதவி.

‘டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டுக்கும் மதிப்பீடுகள் இன்றி ரூபாய் 5 இலட்சம் நிதி உதவி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

கொபெயிகனே பிரதேச செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்ற “பிரஜா சக்தி” விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அமைச்சர் இதனை தெரிவித்தார்.

மேலும், பகுதியளவில் சேதமடைந்த 1,20,000-க்கும் அதிகமான வீடுகளுக்கு முறையான மதிப்பீடுகளை மேற்கொள்ள சுமார் ஒரு வருட காலம் எடுத்துக்கொள்ளலாம் என்பதால், நிவாரண உதவிகள் வழங்குவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.

எந்த குடும்பமும் இந்த 5 இலட்சம் நிலையான இழப்பீட்டை ஏற்க மறுத்தால், அவர்கள் முறையான மதிப்பீட்டை கோரலாம் என்றும், அந்நிலையில் மதிப்பிடப்படும் சேதத்தின் அளவைப் பொறுத்து பல மில்லியன் வரை இழப்பீடு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

முறையான மதிப்பீடு தேவையில்லாத குடும்பங்களுக்கு மிகக் குறுகிய காலத்திலேயே இந்த நிதி உதவியை வழங்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

Join the newsletter

Be the first to read our articles.

Related News

View All