Dec 22, 2025
உள்ளூர்
அம்பாறை கடற்கரையில் உயிரிழந்த ஆமைகள் கரையொதுங்கிய சம்பவம்

அம்பாறை மாவட்டம், மருதமுனை மற்றும் கல்முனை இடையிலுள்ள கடற்கரையில் இரண்டு பெரிய கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன.
கடற்கரைக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் இன்று மதியம் இந்த உயிரிழந்த ஆமைகளை கண்டுள்ளனர்.
ஆமைகள் சுமார் 3 அடி நீளமும், 25–50 கிலோ எடையுள்ளன. கடற்றொழிலாளர்கள் கூறும் படி, காலநிலை காரணமாக ஆழ் கடலில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக இத்தகைய நிகழ்வுகள் இடம்பெறக்கூடும்.
இதன்படி, இரு ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியதை அப்பகுதி மக்கள் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
மேலும், இம்மாவட்டத்தின் கரையோர பகுதிகளில் அண்மையில் கடலாமைகள் மற்றும் டொல்பின்கள் உயிரிழந்து கரையொதுங்கிய நிகழ்வுகள் சமூக ஊடகங்களில் பதிவாகியுள்ளன.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






