Dec 22, 2025
உள்ளூர்
சீனாவிற்கு மாணிக்கக்கற்கள் கடத்த முயன்ற இருவர் கட்டுநாயக்கயில் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டு இலங்கை பயணிகள் பெருமளவான மாணிக்கக்கற்களை ஆசனவாயில் மற்றும் பயணப் பொதிகளில் மறைத்து சீனாவிற்கு கடத்த முயற்சி செய்த்துள்ளனர்.
இவர்கள் பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 38 மற்றும் 39 வயதுடைய மாணிக்கக்கல் வர்த்தகர்கள் எனத் தெரிய வருகிறது.
நேற்று (21) இரவு 10.20 மணியளவில், சீனாவின் செங்டு (Chengdu) நகருக்குப் புறப்பட்ட CA-426 இலக்க விமானத்தில் பயணிக்க அவர்கள் வந்தபோது, சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் 756 கரட் எடையுள்ள 390 மாணிக்கக்கற்கள் கைப்பற்றப்பட்டன, இதற்கான மதிப்பு சுமார் 3 கோடி 20 இலட்சம் ரூபா என கூறப்படுகிறது.
கைப்பற்றப்பட்ட மாணிக்கக்கற்களில் நீல மாணிக்கம், பத்மராகம், கிரிஞ்சி, சிவப்பு கற்கள், கனக, வெரோட், வைடூரியம், சந்திரகாந்தம், தோரமல்லி மற்றும் நட்சத்திரக் கல் ஆகிய பிரதான வகைகள் அடங்கியுள்ளன.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






