
Rebecca
Feb 3, 2026
உள்ளூர்
விசேட பொலிஸ் சுற்றிவளைப்பு நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் நேற்று திங்கட்கிழமை (02) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது, சுமார் 527 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
30இ132 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், குற்றங்களுடன் நேரடியாக தொடர்புடைய 16 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேநேரம், கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளுக்கமைய 251 பேரும், திறந்த பிடியாணைகளுக்கமைய 148 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மதுபோதையில் வாகனம் செலுத்திய 351 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 66 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், பிற போக்குவரத்து குற்றங்களுக்காக 3,997 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






