
janani
Mar 26, 2026
உள்ளூர்
கனடா தூதுவருடன் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் விசேட சந்திப்பு

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நீண்டகால அரசியல் தீர்வாக சமஷ்டி முறையிலான ஆட்சி அமைப்பும், உண்மையான அதிகாரப் பங்கீடும் அவசியம் என இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகரிடம் பாராளுமன்ற உறுப்பினர் ராசாமாணிக்கம் சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.
அந்த சந்திப்பின் போது, இலங்கையில் தமிழர்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கும் அடிப்படை பிரச்சினைகள் குறித்து தெளிவாக முன்வைத்துள்ளார் . காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நீதி, நில அபகரிப்பு, இராணுவ ஆக்கிரமிப்பு, மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பேற்பு இல்லாமை போன்ற விடயங்கள் இன்னும் தீர்வு காணப்படாமல் தொடர்வதை முன்வைத்துள்ளார் .
தமிழ் மக்களின் அரசியல் நிறைவேற்ற சமஷ்டி (Federal) அடிப்படையிலான ஆட்சி முறையே நிரந்தர தீர்வாக அமையும் என்பதை அவர் வலியுறுத்தினார். பல்லின, பல்மொழி மற்றும் பண்பாட்டு பன்முகத்தன்மை கொண்ட கனடா போன்ற நாடுகள், சமஷ்டி முறையின் மூலம் அதிகாரப் பங்கீட்டை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருவதை அவர் முன்னுதாரணமாகக் குறிப்பிட்டார்.
நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றுடன் இணைந்த ஒரு சமஷ்டி தீர்வே இலங்கையில் நிலையான அமைதியை ஏற்படுத்தும் என்பதை கனடா தூதுவரிடம் சாணக்கியன் இந்தச் சந்திப்பில் ஆணித்தரமாகப் பதிவு செய்துள்ளார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All





