Search

admin

Jun 8, 2026

உள்ளூர்

திறைசேரி அறிக்கைக்கு விசேட கவனம்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில், அரச பொது நிதி தொடர்பான நாடாளுமன்ற குழு இன்று(8) பிற்பகல் கூடவுள்ளது.

திறைசேரியில் இருந்து, சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்தச் சம்பவம் தொடர்பில் திறைசேரியினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை குறித்து கூட்டத்தில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.

நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க ஆகியோரை இந்தக் குழுவின் முன்னிலையில் பிரசன்னமாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை மூன்றாம் தரப்பிற்கு மாறியது தொடர்பான அறிக்கையை திறைசேரியிடம் அரசாங்க நிதி பற்றிய குழு முன்னதாகக் கோரியிருந்ததுடன், அந்த அறிக்கை தற்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All