Dec 22, 2025
உள்ளூர்
அம்பலாங்கொட நகரில் காலை துப்பாக்கிச் சூடு: முகாமையாளர் பலி

அம்பலாங்கொடை நகரில் அமைந்துள்ள ஒரு வர்த்தக நிலையத்தின் முகாமையாளரை இலக்காகக் கொண்டு, இன்று (22) காலை துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறித்த முகாமையாளர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள், இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய பின்னர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், இரண்டு குற்றக் கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாகவே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபர் குற்றக் கும்பல் உறுப்பினர்களுடன் தொடர்புகளை கொண்டிருந்தவர் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பிலும், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையாகவும், அம்பலாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






