Search

Dec 22, 2025

உள்ளூர்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்று தரத்தில் வீழ்ச்சி – மக்கள் எச்சரிக்கை

நாட்டின் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களை உள்ளடக்கி, காற்றின் தரக் குறியீடு (Air Quality Index) தற்போது 150 முதல் 200 வரையிலான அளவில் பதிவாகியுள்ளது என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளரும் சுற்றாடல் நிபுணருமான கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக காற்றின் தரத்தில் தொடர்ச்சியான வீழ்ச்சி பதிவாகி வருவதாகவும், இந்த நிலை கவனத்திற்குரியது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு காற்றின் தரம் குறைவடைவது, குழந்தைகள், முதியவர்கள் மற்றும் ஏற்கனவே சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள உணர்திறன் கொண்ட நபர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என அவர் எச்சரித்தார்.
மேலும், சுவாசிப்பதில் சிரமம், மூச்சுத்திணறல் அல்லது ஒவ்வாமை போன்ற அறிகுறிகள் தோன்றினால், தாமதமின்றி மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்றும் அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All