Search

admin

May 22, 2026

உள்ளூர்

மத்தள விமான நிலையம் வழியாக அழைத்து வரப்பட்ட சந்தேகநபர்கள்.

டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 21 பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் இன்று (22) காலை அழைத்து வரப்பட்டுள்ளனர். 

நிலவும் மோசமான காலநிலை காரணமாக, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தரவிருந்த பல விமானங்கள் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டிருந்தது. 

குறித்த விமானங்களில் சிலவற்றிலேயே இந்த சந்தேகநபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த பாதாள உலகக் குழு உறுப்பினர்களில் மஹவத்தே சாமர மற்றும் குடு துமிந்த ஆகியோரும் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மஹவத்தே சாமர மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதுடன், ஏனைய சந்தேகநபர்கள் தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All