Search

Dec 10, 2025

உள்ளூர்

கடலில் விழுந்த நபர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் நெடுந்தீவு இறங்குதுறையில் படகுகள் கட்டியிருந்த கயிற்றில் தடக்கி கடலினுள் விழுந்தவர் சடலமாக மீட்பு

குறித்த நபர் நெடுந்தீவு 15 ஆம் வட்டாரத்தை சேர்ந்த பரராஜசிங்கம் பிரேம்குமார் என்பவர; ஆவார்.

நெடுந்தீவு இறங்குதுறையில் இருந்து புதன்கிழமை (10) அன்று காலை குறிகாட்டுவான் நோக்கி புறப்பட இருந்த படகில் ஏற சென்ற வேளை இறங்குதுறையில் படகுகள் கட்டி இருந்த கயிற்றில் தடக்கியதில் தடுமாறி கடலினுள் விழுந்து நீரில் மூழ்கி காணாமல் போனார்.

உடனடியாக கடற்படை சுழியோடிகள் கடலில் குதித்து தேடிய நிலையில் நீண்ட நேர தேடலின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நெடுந்தீவு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All