Search

Rebecca

Dec 16, 2025

உள்ளூர்

சர்வஜன கட்சி உறுப்பினர் கைது

பொலன்னறுவை பகுதியில் இடம்பெற்ற மனிதப்படுகொலையுடன் தொடர்புடையதாக சர்வஜன அதிகாரம் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் அப்துல் சமட் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த 14ஆம் திகதி அவர் கைதுசெய்யப்பட்டார். நபரொருவர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இந்த கைது இடம்பெற்றிருந்தது. தாக்குதலுக்கு உள்ளான நபரின் பற்கள் உடைந்துள்ளதுடன் அவர் சிகிச்சைகளுக்கு உட்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கைதான அப்துல் சமட் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்த தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் நபர் ஒருவர் உயிரிழந்ததுடன் அதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

மரண விசாரணையின் பின்னர் பகிரங்க தீர்ப்பொன்று வழங்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவரின் உடற்பாகங்கள் இரசாயன பகுப்பாய்விற்கு உட்படுத்த இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

தாக்குதலுக்கு மேலதிகமாக மனித கொலை தொடர்பிலும் சர்வஜன அதிகாரம் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் அப்துல் சமட் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதற்கமைய கொலை தொடர்பில் அவர் இன்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All