
admin
May 19, 2026
உள்ளூர்
அடுத்த 24 மணி நேரத்திற்கு கடல் கொந்தளிப்பு அபாயம்

நாட்டைச் சுற்றியுள்ள பல கடல் பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு பலத்த காற்றும், கொந்தளிப்பான கடல் நிலையும் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இன்று (19) பிற்பகல் 2.00 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பின்படி இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பகுதிகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
இதேவேளை ஏனைய கடல் பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






