Search

admin

May 13, 2026

உள்ளூர்

மழைக்கால அவசர எச்சரிக்கை!

நாடு முழுவதும் நிலவும் கடும் மழை காரணமாக, மலைப்பாங்கான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மண்சரிவு மற்றும் நிலச்சரிவு குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

மண்சரிவு அபாயத்தைக் குறைக்க பொதுமக்கள் பின்வரும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

வீடுகளைச் சுற்றியுள்ள வடிகால் அமைப்புகளை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் மழைநீர் தேங்காமல் விரைவாக வெளியேற வழிவகை செய்ய வேண்டும்.

வீட்டிற்கு மேல்புறமாக சரிவுகளில் உள்ள பாரிய மரங்கள் அல்லது விழக்கூடிய நிலையிலுள்ள பொருட்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீட்டின் பின்புறம் உள்ள உயர்ந்த மண் மேடுகள் அல்லது சரிவுகளில் மழைநீர் நேரடியாக ஊடுருவாதவாறு பாதுகாப்பான நீர் திசைதிருப்பும் வழிகளை அமைக்க வேண்டும்.

கூரையிலிருந்து விழும் மழைநீர் நிலத்தில் ஒரே இடத்தில் தேங்காமல் முறையாக வெளியேற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

மண்சரிவு ஏற்படுவதற்கு முன்னர், நிலத்தில் திடீரென ஏற்படும் வெடிப்புகள் அல்லது பிளவுகள்.

மரங்கள், மின் கம்பங்கள் அல்லது மதில்கள் திடீரென ஒரு பக்கமாக சாய்தல்.

தரையிலிருந்து அல்லது நீரூற்றுகளிலிருந்து திடீரென சேற்று நீர் வெளியேறுதல்.

கதவு மற்றும் ஜன்னல்கள் சரியாக மூட முடியாமல் போதல் அல்லது நிலத்தில் அதிரும் சத்தம் கேட்டல் போன்ற அறிகுறிகள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஏதேனும் சந்தேகத்திற்கிடமான மாற்றங்கள் தென்பட்டால், உடனடியாக அப்பகுதியிலுள்ள கிராம உத்தியோகத்தர் அல்லது அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 என்ற அவசர இலக்கத்திற்கு அறிவிக்க வேண்டும்.

அபாய வலயங்களில் உள்ள மக்கள் தேவையேற்படின் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரத் தயாராக இருக்குமாறும், அண்டை வீட்டாருக்கு இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All