Search

Rebecca

Nov 30, 2025

உள்ளூர்

சில பகுதிகளில் இன்றும் மழை!

“டித்வா” புயலானது தற்போது காங்கேசன்துறையிலிருந்து வடகிழக்கு திசையில் 210 கி.மீ தொலைவில் அகலாங்கு 11.4°N மற்றும் நெட்டாங்கு 80.6°E இற்கு அருகில் மையங்கொண்டுள்ளது.

இத்தொகுதி தொடர்ந்து நாட்டில் இருந்து விலகி வடக்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் இந்தியாவின் தமிழ்நாட்டு கடற்கரைக்குச் சமாந்தரமாக நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, நாட்டின் வானிலையில் புயலின் தாக்கம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

அதன்படி, வடக்கு, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வடக்கு மாகாணத்தில் மணிக்கு 50 கி.மீ வரை மிதமான பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All