Search

admin

Feb 23, 2026

உள்ளூர்

இன்று மழை குறைவடையும் சாத்தியம்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் நாட்டை விட்டு விலகிச் செல்வதன் காரணமாக, தற்போது நிலவும் பலத்த மழை நிலைமை படிப்படியாகக் குறைவடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அடிக்கடி மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது. 

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. 

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All