
Rebecca
Feb 6, 2026
உள்ளூர்
இடையூறுகளுக்கு மத்தியில் மாகாண சபை தேர்தல் தொடர்பில் இரா.சாணக்கியன் கேள்வி

நிலையியற் கட்டளைகள் 100, 101 மற்றும் 102 ஆகியவற்றைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இரா.சாணக்கியன் சபாநாயகரிடம் ஒரு நிமிடம் பேச வேண்டுகோள் விடுத்ததையடுத்து, சபாநாயகர் அதற்கு மறுப்பு தெரிவித்தார். இதனையடுத்து சபாநாயகர் ஒரு நிமிடம் அனுமதித்ததையடுத்து, அவர் பேச ஆரம்பித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் ஒரு தீர்வைக் காண்பதற்காக, நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றைத் நியமிப்பதற்கான பிரேரணை கடந்த 2026 ஜனவரி 6ஆம் திகதி இந்த நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
ஜனவரி 6ஆம் திகதி முதல் எதிர்க்கட்சியானது தனது பிரதிநிதிகளாக கௌரவ ரஞ்சித் மத்துமபண்டார, நான் (மனுதாரர்), கௌரவ நிசாம் காரியப்பர் மற்றும் கௌரவ மனோ கணேசன் ஆகிய நான்கு பெயர்களையும் அனுப்பி வைத்துள்ளது. ஆனால், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒரு மாதம் கடந்தும் அரசாங்கம் இதுவரை தமது பெயர்களை அனுப்பவில்லை.
இது மாகாண சபைத் தேர்தல்களைத் தாமதப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் தெளிவான நகர்வாகும். வெளிவிவகார அமைச்சர் இன்று காலை உள்நாட்டு பொறிமுறைகள் பற்றிப் பேசினார். வன்முறைகள் மீண்டும் ஏற்படாது என்பதை உறுதிப்படுத்த வேண்டுமாயின், குறைந்தபட்சம் ஏதாவதொரு அதிகாரப் பகிர்வு மாதிரியாவது இருக்க வேண்டும். ஆனால் அறிவிப்பு வெளியாகி ஒரு மாதமாகியும் அரசாங்கம் சார்பில் நீங்கள் இன்னும் பெயர்களை வழங்கவில்லை.
இது மாகாண சபைத் தேர்தல்களைத் தள்ளிப்போடும் ஒரு திட்டமிட்ட செயலாகும். கௌரவ பிரதமர் அவர்களும் இந்தச் சபையில் இருக்கிறார். கௌரவ பிரதமர் அவர்களே, தயவுசெய்து இதில் தலையிட்டு நடவடிக்கை எடுங்கள். எதிர்க்கட்சி தனது பெயர்களை ஏற்கனவே அனுப்பிவிட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






