Search

Rebecca

Jan 27, 2026

உள்ளூர்

அருட்தந்தை பொலிஸாரினால் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு - நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்

அருட்தந்தை மிலான் பிரியதர்ஷன பொலிஸாரினால் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (27)காலை 9 மணி அளவில் நீர்கொழும்பு மாநகர சபைக்கு முன்பாக தெல்வத்தை சந்தியில்  அருட்தந்தையர்கள், அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள் அமைதியான முறையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநகர சபை முன்றலில் இருந்து நீர்கொழும்பு - சிலாபம் பிரதான வீதி ஊடாக தெல்வத்தை சந்திக்கு பேரணியாக வந்து அமைதியான முறையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அருட்சகோதர, சகோதரிகள் இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தி இருந்தனர்.

பின்னர் அமைதியான முறையில் கலைந்து சென்றனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All