
Rebecca
Feb 19, 2026
உள்ளூர்
ஜனாதிபதியை வரவேற்ற பிரதமர் மோதி

இந்தியாவில் இடம்பெறும் AI Impact மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்றுள்ள ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவை பிரதமர் நரேந்த்ர மோதி வரவேற்றார்.
குறித்த மாநாடு பாரத் மண்டபத்தில் இடம்பெறுகிறது. பிராந்தியத்திற்கிடையில் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அம்சங்களில் ஒத்துழைப்பை பலப்படுத்துவதே இந்த மாநாட்டின் நோக்கமாகும்.
இதேவேளை குறித்த மாநாட்டில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இன்றைய தினம் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






