
Rebecca
Feb 23, 2026
உள்ளூர்
2026 ஆண்டுக்கான தபால் திணைக்களத்தின் வருமான இலக்கு

தபால் திணைக்களம் இந்த வருடத்தில் 15,000 மில்லியன் ரூபா வருமான இலக்கை இலகுவாக அடையுமென அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
5.1 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்பட்ட மடவல உல்பத்த தபால் அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடம் தபால் திணைக்களத்தின் முன்னேற்றத்திற்காக சுமார் 2,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், 13,450 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டது.
அதன் அடிப்படையில் இந்த வருடம் 15,000 மில்லியன் ரூபாய் வருமான இலக்கை அடைய முடியுமென அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தபால் சேவையை நவீனமயமாக்குவதற்காக, மத்திய தபால் பரிமாற்றகத்திற்கு 209 பாதுகாப்பு கேமராக்களை கொள்வனவு செய்ய 27 மில்லியன் ரூபாவும், 225 கணினிகளுக்காக 74 மில்லியன் ரூபாவும், 1,500 டெப் கணினிகளை கொள்வனவு செய்ய 101 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






