Search

admin

Feb 20, 2026

உள்ளூர்

பாதாள உலகக் குழுவினருடன் தொடர்பு பேணிய அரசியல்வாதிகள்

கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட சில பாதாள உலகக் குழு உறுப்பினர்களுடன் தொடர்புகளைப் பேணிய அரசியல்வாதிகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளதாகப் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று பாராளுமன்றில் தெரிவித்தார். 

பத்மே உள்ளிட்ட சில சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதன் பின்னர், அவர்களிடம் இருந்த 30 தொலைபேசிகள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது இந்தத் தகவல்கள் கண்டறியப்பட்டதாக அவர் கூறினார். 

அதன்படி, குறித்த அரசியல்வாதிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு, வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், முழுமையான விசாரணைகளின் பின்னர் இது குறித்த தெளிவான விபரங்கள் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் வெளிப்படுத்தினார். 

அந்த அரசியல்வாதிகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன, வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. 

முழுமையான விசாரணையின் பின்னர் இது குறித்த தெளிவான அறிக்கையொன்றை வெளியிடுவோம். தற்போது விசாரணைகள் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றன எனத் தெரிவித்தார்.







Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All