Search

janani

May 17, 2026

உள்ளூர்

பொலிஸாருக்கு கிடைக்கும் பதவி உயர்வு!

ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த பதவி உயர்வுகளை மிக விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

புத்தளம் மாவட்டத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அப்பகுதியின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் நடத்தப்பட்ட விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.

பொலிஸ் சேவையை தர ரீதியாகவும், உயர் தொழில்முறை சேவையாகவும் மேம்படுத்துவதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், பொலிஸ் துறையில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் புதிய உத்தியோகத்தர்களை இணைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All