
Rebecca
Feb 25, 2026
உள்ளூர்
தேசிய மக்கள் சக்தி வேட்பாளரின் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு!

காலி, கிந்தோட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மீது இன்று (25) அதிகாலை பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கிந்தோட்டை, கிங்கங்கை மாவத்தையில் அமைந்துள்ள குறித்த வீட்டிற்கு வந்த இனந்தெரியாத குழுவினர், வீட்டின் கூரை மீது பெற்றோல் குண்டுத் தாக்குதலை நடத்தியதுடன், பின்னர் வீட்டிற்கு முன்னால் மற்றுமொரு பெற்றோல் குண்டையும் வீசியுள்ளனர்.
கூரையின் மீது வீசப்பட்ட பெற்றோல் குண்டு வெடித்ததில், கூரையின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.
மற்றைய பெற்றோல் குண்டு வெடிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், குறித்த வீட்டில் வசிப்பவர்களில் ஒருவர் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் மேலதிகப் பட்டியலில் போட்டியிட்ட வேட்பாளர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






