Search

Aug 30, 2025

உள்ளூர்

குற்றப்புலனாய்வு விசாரணையில் பெக்கோ சமனின் மனைவி

இந்தோனேசியாவில் கெஹல்பத்தர பத்மேவுடன் கைது செய்யப்பட்ட பெக்கோ சமனின் மனைவி, கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விமான நிலையப் பிரிவு இந்த விசாரணையை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பெண் தனது பிள்ளையுடன் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து நேற்று(29) மாலை 5.50 மணிக்கு ஸ்ரீ லங்கன் விமானம் UL 365 மூலம் இந்தோனேசியாவிலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளார்.

இந்தப் பெண் தாம் பெக்கோ சமனின் மனைவி என குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All