Search

janani

Jul 8, 2026

உள்ளூர்

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியினரின் கருப்புப் பட்டி எதிர்ப்பு!

இன்றைய (08) பாராளுமன்ற அமர்வின் போது, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கருப்புப் பட்டி அணிந்து தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 27 பேர் உயிரிழந்தனர். இந்த மரணங்களுக்கு அரசாங்கமே முழுமையான பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தியே எதிர்க்கட்சியினர் இவ்வாறான கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம் மற்றும் உயிரிழந்தோருக்கான நீதியை வலியுறுத்தி பாராளுமன்றத்திற்கு உள்ளே எதிர்க்கட்சியினர் தமது எதிர்ப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All