Search

admin

Mar 12, 2026

உள்ளூர்

மிதி பலகையில் பயணம் : கீழே விழுந்து ஒருவர் பலி

பேருவளை, மஸ்ஸல பிரதேசத்தில் நேற்று அதிகாலை வேளையில் பேருந்திலிருந்து கீழே விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளார். 

மாத்தறை நோக்கி பயணித்த பேருந்தில் ஏறிய இந்த பயணி, பாதுகாப்பற்ற முறையில் அதன் மிதி பலகையில் நின்றுகொண்டிருந்த போது திடீரென கீழே விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

இவ்வாறு உயிரிழந்தவர் பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய நபராவார். 

குறித்த நபர் பேருந்தின் பின்பக்க கதவு வழியாக ஏறி மிதி பலகையிலேயே நின்றுகொண்டிருந்துள்ளார். 

இதன்போது அவருக்கு வந்த தொலைபேசி அழைப்பொன்றுக்கு, மிதி பலகையில் நின்றவாறே பாதுகாப்பற்ற முறையில் பதிலளிக்க முற்பட்ட போதே அவர் இவ்வாறு கீழே விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All