
Rebecca
Feb 6, 2026
உள்ளூர்
மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் பலி

அலவத்துகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வராகஸ்ஹின்ன பகுதியில் நேற்று (05) இருவர் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் மேலும் சிலருடன் இணைந்து வீடொன்றின் பாதுகாப்புச் சுவரை நிர்மாணித்துக் கொண்டிருந்த போதே, இந்த மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த விபத்தில் உயிரிழந்தவர் நாகொல்லாகொட பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அலவத்துகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






