
admin
Mar 9, 2026
உள்ளூர்
குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவு உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் 27 வயதுடைய இந்திய பிரஜை என தெரியவந்துள்ளது.
அவரிடமிருந்து 2 கிலோ கிராம் 762 கிராம் எடையுள்ள குஷ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






