Search

admin

Apr 14, 2026

உள்ளூர்

தீவிரமடையும் இன்றைய வானிலை

பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

இன்று (14) பிற்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு இரவு 11.00 மணிவரையில் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பிற்பகல் 1.00 மணிக்கு மேல்,சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை, அனுராதபுரம், மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் உள்ள சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்பகுதிகளில் இடியுடன் கூடிய மழையால் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கும் அபாயத்தைக் குறைக்க மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Join the newsletter

Be the first to read our articles.

Follow Social Media

Follow us and don’t miss any updates!

Related News

View All