
admin
Jul 14, 2026
உள்ளூர்
விளையாட்டு அரங்கில் புதிய போட்டி பரபரப்பு – கரப்பந்தாட்ட தொடர் விரைவில்.

ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்ட தொடரை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு இலங்கை கரப்பந்தாட்ட சம்மேளனம் திட்டமிட்டுள்ளது.
இப்போட்டித் தொடருக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15 ஆம் திகதியுடன் நிறைவடையும் என அந்தச் சம்மேளனம் அறிவித்துள்ளது.
மாவட்ட மட்டத்தில் ஆரம்பமாகும் இப்போட்டித் தொடரில், மாவட்ட போட்டிகளில் வெற்றிபெறும் தலா 25 அணிகள் தேசிய மட்டப் போட்டிகளுக்கு தகுதி பெறவுள்ளன.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்ட தொடரின் ஆடவர் பிரிவில் தெஹியோவிட்ட ரன்தரு விளையாட்டுக் கழகமும், மகளிர் பிரிவில் மஹாஉஸ்ஸேவ ரதனபால விளையாட்டுக் கழகமும் செம்பியன் பட்டங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






