
admin
Dec 30, 2025
உள்ளூர்
போரதீவுபற்று பிரதேச சபை மற்றும் பொது நூலகம் நடத்திய தேசிய வாசிப்பு மாத நிகழ்வு

போரதீவுபற்று பிரதேச சபையும் பொது நூலகங்களும் இணைந்து நடாத்திய தேசிய வாசிப்பு மாத நிகழ்வும், பரிசளிப்பு விழாவும் ,மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் விமலநாதன் மதிமேனன் தலைமையில் இன்றைய தினம் வெல்லாவெளி கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக உள்ளூராட்சி உதவி ஆணையாளர் றிப்கா கலந்து சிறப்பித்தார்.
மேலும் இந் நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக பிரதேச செயலாளர் சோ. ரங்கநாதன் , உப தவிசாளர் த.கயசீலன், செயலாளர் சி.பகிரதன்,என்போரும், பிரதேச சபை உறுப்பினர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள்,எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது தேசிய வாசிப்பு மாதத்தை நடாத்தப்பட்ட போட்டி நிகழ்வுகளில் பங்கு பற்றிய மாணவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






