
admin
Feb 9, 2026
உள்ளூர்
இலங்கைக்கு அரிசி நன்கொடை வழங்கிய மியன்மார் அரசு

திட்வா புயல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் மியன்மார் அரசினால் 500 மெட்ரிக் தொன் அரிசி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
இதனை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கும் நிகழ்வில் அமைச்சர் வசந்த சமரசிங்க கலந்துகொண்டார். இலங்கைக்கான மியன்மார் தூதுவர் மார்லர் தன் டயிக் அவர்களினால் அரிசி நன்கொடை அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
மியன்மார் அரசாங்கம் ஏற்கனவே புயல் அனர்த்த நிவாரண நிதி வழங்கியுள்ள நிலையில் அதற்கு மேலதிகமாக குறித்த அரிசி நன்கொடை கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any updates!
Related News
View All






